Business

National Common Mobility Card,பணம் செலுத்த புதிய கார்டு.. மெட்ரோ நிலையங்களில் இனி பிரச்சினையே இல்லை! – new debit card has been introduced to make payments at metro stations and buses

National Common Mobility Card,பணம் செலுத்த புதிய கார்டு.. மெட்ரோ நிலையங்களில் இனி பிரச்சினையே இல்லை! – new debit card has been introduced to make payments at metro stations and buses
National Common Mobility Card,பணம் செலுத்த புதிய கார்டு.. மெட்ரோ நிலையங்களில் இனி பிரச்சினையே இல்லை! – new debit card has been introduced to make payments at metro stations and buses


நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) என்ற ஒருங்கிணைந்த டெபிட் கார்டை ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு என்பது RuPay காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வசதி ஆகும். இது கார்டு ரீடரில் கார்டைத் தட்டுவதன் மூலம் நீங்கள் மெட்ரோ நிலையங்கள், பேருந்து போன்றவற்றில் ஆஃப்லைன் முறையில் பணம் செலுத்த முடியும். இந்த முயற்சியானது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதன் மூலம் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்று ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil metro

நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டைச் செயல்படுத்தவும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு கார்டைப் பயன்படுத்தவும் கார்டுதாரர்கள் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் அல்லது IVR மூலம் ‘காண்டாக்ட்லெஸ்’ அம்சத்தை இயக்க வேண்டும். அதைச் செயல்படுத்திய பிறகு பயனர்கள் மெட்ரோ நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை வசதிக்குச் சென்று தொடங்கலாம். ஏற்கனவே உள்ள சேமிப்புக் கணக்கு மூலம் இந்த கார்டில் பணத்தை ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த டெபிட் கார்டின் பேலன்ஸ் அதிகபட்ச வரம்பு ரூ.2,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டிரான்சிட் புள்ளிகளில் பணப் பரிவர்த்தனைகள் அல்லது கார்டை தங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைப்பது உட்பட பல சேனல்கள் மூலம் கார்டு பேலன்ஸ் தொகையை நீங்கள் ஏற்றிக் கொள்ளலாம்.

Cred Card உபயோகிப்பது நஷ்டமா?

ஆஃப்லைன் வாலட்டின் பேலன்ஸ் குறித்த தகவலை சில போக்குவரத்து ஆபரேட்டர்களின் பிஓஎஸ் டெர்மினல்களில் விசாரிக்கலாம். வங்கியின் இ-சேனல்கள் மூலம் ‘add money’ வசதியைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்த பிறகு வாடிக்கையாளர்கள் தங்கள் பேலன்ஸ் தொகையைப் புதுப்பிக்கலாம்.

ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் வாலட்டைச் செயல்படுத்த வேண்டும். தேவையான இருப்பை பராமரிக்க வேண்டும். மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் கார்டைத் தட்ட வேண்டும். தானியங்கி கட்டண கால்குலேட்டர் (AFC) ஆஃப்லைன் வாலட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும். ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *