![jsw energy: JSW Energy :க்யூ ஐ பி மூலமாக ரூ.5,000 கோடி நிதி திரட்டு ஜே எஸ் டபிள்யூ… பங்கு விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா? – jsw energy qip jsw energy: JSW Energy :க்யூ ஐ பி மூலமாக ரூ.5,000 கோடி நிதி திரட்டு ஜே எஸ் டபிள்யூ… பங்கு விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா? – jsw energy qip](https://static.langimg.com/thumb/msid-108988788,imgsize-21276,width-540,height-405,resizemode-75/jsw-energyet-tamil-108988788.jpg)
![jsw energy: JSW Energy :க்யூ ஐ பி மூலமாக ரூ.5,000 கோடி நிதி திரட்டு ஜே எஸ் டபிள்யூ… பங்கு விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா? – jsw energy qip jsw energy: JSW Energy :க்யூ ஐ பி மூலமாக ரூ.5,000 கோடி நிதி திரட்டு ஜே எஸ் டபிள்யூ… பங்கு விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா? – jsw energy qip](https://static.langimg.com/thumb/msid-108988788,imgsize-21276,width-540,height-405,resizemode-75/jsw-energyet-tamil-108988788.jpg)
ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனம் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் எனப்படும் QIP முறையில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதாவது நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்து ரூ.5,000 கோடி நிதி திரட்ட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் பங்கின் முகமதிப்பு ரூ.10 ஆகும்.
நிறுவனங்கள் தங்களுக்கு நிதி தேவைப்படும் சமயங்களில் நிதி திரட்ட பயன்படுத்தப்படும் முறைகளில் க்யூ ஐ பியும் ஒன்றாகும். இதன் மூலம் ஒரு நிறுவனம் தகுதியான நிறுவன ஏலதாரர்களுக்கு பங்குகளை வழங்கி, நிதியை திரட்டும். மூன்றாம் காலாண்டில் ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 24.36 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலாண்டில் வருவாய் 13.3 சதவீதம் அதிகரித்து ரூ.2,349.79 கோடியாக உள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை என் எஸ் இ சந்தையில் 4 சதவீதம் உயர்ந்து ரூ.542 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
பெண்களுக்கான சிறந்த முதலீடு இது.! Future பற்றி கவலை வேண்டாம்.!