Business

jsw energy: JSW Energy :க்யூ ஐ பி மூலமாக ரூ.5,000 கோடி நிதி திரட்டு ஜே எஸ் டபிள்யூ… பங்கு விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா? – jsw energy qip

jsw energy: JSW Energy :க்யூ ஐ பி மூலமாக ரூ.5,000 கோடி நிதி திரட்டு ஜே எஸ் டபிள்யூ… பங்கு விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா? – jsw energy qip
jsw energy: JSW Energy :க்யூ ஐ பி மூலமாக ரூ.5,000 கோடி நிதி திரட்டு ஜே எஸ் டபிள்யூ… பங்கு விலையில் பாதிப்பு ஏற்படுத்துமா? – jsw energy qip


ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனம் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் எனப்படும் QIP முறையில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதாவது நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்து ரூ.5,000 கோடி நிதி திரட்ட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பில்லியனர் சஜ்ஜன் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனம் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் எனப்படும் QIP முறையில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதாவது நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்து ரூ.5,000 கோடி நிதி திரட்ட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் பங்கின் முகமதிப்பு ரூ.10 ஆகும்.

க்யூ ஐ பி முறையில் பங்குகள் வெளியிடப்படும் தேதி, அதன் விலை உள்ளிட்ட விவரங்களை ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனம் வெளியிடவில்லை. இந்த முடிவுகளை நிறுவனத்தின் வாரியக்குழு தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்களுக்கு நிதி தேவைப்படும் சமயங்களில் நிதி திரட்ட பயன்படுத்தப்படும் முறைகளில் க்யூ ஐ பியும் ஒன்றாகும். இதன் மூலம் ஒரு நிறுவனம் தகுதியான நிறுவன ஏலதாரர்களுக்கு பங்குகளை வழங்கி, நிதியை திரட்டும். மூன்றாம் காலாண்டில் ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 24.36 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலாண்டில் வருவாய் 13.3 சதவீதம் அதிகரித்து ரூ.2,349.79 கோடியாக உள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை என் எஸ் இ சந்தையில் 4 சதவீதம் உயர்ந்து ரூ.542 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

பெண்களுக்கான சிறந்த முதலீடு இது.! Future பற்றி கவலை வேண்டாம்.!

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்

இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி

இரா.ரூபாவதி மூத்த டிஜிட்டல் உள்ளடக்க தயாரிப்பாளர்

இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.மேலும் படிக்க



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *