
கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மூவரை துரிதமாக வெளியேற்றினர் பும்ராவும், சிராஜும். இருந்தும் சதீரா சமரவிக்ரமா மற்றும் சாரித் அசலங்கா இணைந்து 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.