![வெற்றிக்கான ரன்களை சேர்த்தது எப்படி? – விவரிக்கும் சாரித் அசலங்கா வெற்றிக்கான ரன்களை சேர்த்தது எப்படி? – விவரிக்கும் சாரித் அசலங்கா](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/16/xlarge/1124286.jpg)
![வெற்றிக்கான ரன்களை சேர்த்தது எப்படி? – விவரிக்கும் சாரித் அசலங்கா வெற்றிக்கான ரன்களை சேர்த்தது எப்படி? – விவரிக்கும் சாரித் அசலங்கா](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/16/xlarge/1124286.jpg)
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 252 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. கைவசம் 7 விக்கெட்கள் இருந்த நிலையில் வெற்றிக்கு மேற்கொண்டு 42 பந்துகளில் 42 ரன்களே தேவையாக இருந்தது.
அந்த சூழ்நிலையில் இலங்கை திடீரென சரிவை சந்தித்தது. குஷால் மெண்டிஸ் (91),தசன் ஷனகா (2), தனஞ்ஜெயா டி சில்வா(5), துனித் வெல்லலகே (0) ரன்னில் வெளியேறினர். எனினும் ஆல்ரவுண்டரான சாரித் அசலங்கா நம்பிக்கையுடன் விளையாடினார். அறிமுக வீரரான ஜமான் கான் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 3-வது பந்தில் பிரமோத் மதுஷன் (1) ரன் அவுட்னார்.