State

''விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு நான் பேசியது கிடையாது'' – சீமான் பேட்டி

''விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு நான் பேசியது கிடையாது'' – சீமான் பேட்டி
''விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு நான் பேசியது கிடையாது'' – சீமான் பேட்டி


சென்னை: "நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார். விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவு செய்து வெளியிடுபவர் தானே, நான் பேசியதாக கூறுவதை ஏன் வெளியிடவில்லை? சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாகவும், சீமானுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகவும் கூறியிருந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நிறைய பொய்கள் சொல்லும்போது. அதை ஒரு பொய்யாக கூறிச் சென்றுள்ளார். நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார். விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவு செய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை? கம்ப்ரமைஸ், சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *