Cinema

விஜயகுமாரி ரத்தம் சிந்தி நடித்தப் படம் ‘பூம்புகார்’

விஜயகுமாரி ரத்தம் சிந்தி நடித்தப் படம் ‘பூம்புகார்’


ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் 'கோவலன்' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. அதை, 1942-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் ‘கண்ணகி’ என்ற பெயரில் படமாகத் தயாரித்தது. கண்ணகியாக கண்ணாம்பாவும், கோவலனாக பி.யு.சின்னப்பாவும் நடித்தனர். இதே கதையை இன்னும் கொஞ்சம் கற்பனைக் கலந்து அருமையான வசனங்களோடு உருவாக்க நினைத்தார், முன்னாள்முதல்வர் மு.கருணாநிதி. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘பூம்புகார்’.

கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தியடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நடித்தனர். நாகேஷ், மனோரமாவும் உண்டு. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஆர். சுதர்சனம் இசை அமைத்தார். பாடல்களை உடுமலை நாராயண கவி, மாயவநாதன், ஆலங்குடி சோமு, மு.கருணாநிதி, ராதாமாணிக்கம் எழுதி இருந்தனர்.



Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *