புதுச்சேரியில், மாவட்டங்களுக்கு இடையிலான, மாஸ்டர்ஸ், 10 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. புதுச்சேரி மேற்கு மற்றும் தெற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய புதுச்சேரி மேற்கு அணி, 10 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழந்து 120 ரன்கள் குவித்தது. மேற்கு அணியின் ஜெயக்குமார் 23 பந்துகளில் 54 ரன், ராஜா 19 பந்துகளில் 39 ரன் எடுத்தனர்.
இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் புதுச்சேரியின் தலைவர் தாமோதரன், ஜம்மு – காஷ்மீர் மாகாணத்தின் கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர் அணில் குப்தா, கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் புதுச்சேரியின் முன்னாள் செயலாளர் சந்திரன், முன்னாள் இணை செயலாளர் வெங்கடராமன், செயலாளர் ராமதாஸ் மற்றும் சி.ஐ.ஓ., வாசன் ராஜ் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். வழங்கினர்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருதை புதுச்சேரி மேற்கு அணியின் ராஜா, சிறந்த பவுலர் மற்றும் ஆட்டக்காரர் விருதை தெற்கு அணியின் ராகேஷ் பெற்றனர்.