![மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம் மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம்](https://img.dinamalar.com/images/dummy-noimg.jpg)
![மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம் மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம்](https://img.dinamalar.com/images/dummy-noimg.jpg)
கோவை: கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், கற்பகம் இன்ஜி., கல்லுாரி மற்றும் சி.எம்.எஸ்., கல்லுாரி அணிகள் அபாரமாக விளையாடி, அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
நேற்று நடந்த நாக் அவுட் சுற்றுப்போட்டியில், கே.சி.டி., மற்றும் சி.எம்.எஸ்., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கே.சி.டி., 19.2 ஓவர்களில் 103க்கு ஆல் அவுட் ஆனது. சி.எம்.எஸ்., அணியின் அருண் குமார் சிறப்பாக பந்து வீசி, நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய சி.எம்.எஸ்., கல்லுாரியின் துவக்க வீரர் பிரவீன் குமார் (62*), அதிரடியாக விளையாட, சி.எம்.எஸ்., அணி 14.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நேற்று மதியம் நடந்த மற்றொரு போட்டியில், கற்பகம் இன்ஜி., கல்லுாரி மற்றும் எஸ்.ஆர்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரி அணிகள் போட்டியிட்டன.
இதில் முதலில் பேட்டிங் செய்த கற்பகம் அணி, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 126 ரன்கள் சேர்த்தது. அணிக்காக சபரீஷ் 33 ரன்கள் எடுத்தார்.
வெற்றி பெற 127 ரன்கள் தேவை என்ற இலக்குடன், களமிறங்கிய எஸ்.ஆர்.எம்.வி., அணியினர் சபரி (நான்கு விக்கெட்), அஷ்வின் பாபு (மூன்று விக்கெட்) ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.