State

“மக்களவை தேர்தலையொட்டி  தமிழ்நாட்டில் ரெய்டு அதிகரிக்கும்” – கார்த்தி சிதம்பரம் கருத்து

“மக்களவை தேர்தலையொட்டி  தமிழ்நாட்டில் ரெய்டு அதிகரிக்கும்” – கார்த்தி சிதம்பரம் கருத்து
“மக்களவை தேர்தலையொட்டி  தமிழ்நாட்டில் ரெய்டு அதிகரிக்கும்” – கார்த்தி சிதம்பரம் கருத்து


மதுரை: “மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை ரெய்டு அதிகரிக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்த சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது: “சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவது வழக்கம். தமிழகத்தில் ஏற்றதாழ்வு இருக்கக்கூடாது என்பது தான் நமது சனாதனம். வடமாநிலத்தில் சனாதனத்துக்கு வேறு புரிதல் இருக்கலாம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில் எம்மதமும் சம்மதம். மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறோம். திமுகவை சாதி அரசியல் செய்யும் கட்சி என சொல்லக் கூடாது. தலைமையில் உள்ளவர்கள் தங்களது சதியை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. கருணாநிதியின் பலமே அது தான். அவர் எந்த சமுதாயத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *