
நாமக்கல்: கட்டுப்பாடு இல்லாததால், நாமக்கல் மலைக்கோட்டை பொலிவிழந்து வருகிறது. இதைத் தடுக்க தொல்லியல் துறையினர் காவலர்களை நியமித்துக் கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இக்கோட்டையின் ஒருபுறம் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயில்கள் உள்ளன. அதுபோல, கோட்டையின் மற்றொரு புறம் ரங்கநாதர் சந்நிதி உள்ளது.