Health

பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஊஷார்…! – News18 தமிழ்

பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஊஷார்…! – News18 தமிழ்
பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஊஷார்…! – News18 தமிழ்


புற்றுநோய் விழிப்புணர்வு (Sanjeevani) குறித்து நியூஸ் 18 உள்ளூர் செய்திகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் அதன் அறிகுறிகள் குறித்தும் மருத்துவர்களிடம் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் விரிவான செய்திகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து டாக்டர் ஷஃபாலிகா.எஸ்.பி மகப்பேறு மருத்துவர் நமக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயின் உயிரணுக்களில் ஏற்படும் ஒரு வகை புற்றுநோயாகும்.
பொதுவாக 30 முதல் 42 வயது உடைய பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். இது பொதுவான ஒன்று தான் இந்த வயதில் மாதவிடாய் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு , உடலுறவுக்குப் பிறகு ரத்தக்கசிவு இருந்தாலும் மகப்பேறு மருத்துவரை நிச்சயம் அணுக வேண்டும் என மருத்துவர் ஷஃபாலிகா.எஸ்.பி தெரிவித்தார். மேலும், மருத்துவர் அறிவுரையின்படி ஸ்பிரினிங் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக சிறப்பு முன் அனுமதி பெற தேவையில்லை எனகூறும் மருத்துவர், வழக்கமாக நாம் சந்திக்கும் மகப்பேறு மருத்துவரை சந்தித்து இது தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

இதேபோன்று பேப்ஸ்மியர் பரிசோதனை என்பது கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கானது மாதவிடாய் மற்றும் அதற்குப் பிறகு ஏற்படும் ரத்தக் கசிவிற்கு இந்த பரிசோதனை மிக முக்கியமானது. இந்த பரிசோதனை மூலம் புற்றுநோய் பிற்காலத்திலும் வருமா என்பது தெரிந்து கொள்ள முடியும்.

இந்த பேப்ஸ்மியர் பரிசோதனைக்கு அடுத்து HPV,DNA நடத்தப்படும். இது முக்கியமான பரிசோதனையாகும். 99 சதவீதம் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் HPV வைரஸ் மூலம் தெரியவரும். இந்த பரிசோதனையின் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இல்லை என்பதை அறிந்து கொண்டால் ஐந்து வருடத்திற்கு இந்த நோய் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. மேலும் இந்த பரிசோதனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தால் அதன் வீரிய தன்மை பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும் என தெரிவிக்கிறார். இதற்குப் பிறகு 100 சதவீதம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது நமக்கு தெரிய வரும். மேலும் முன்னெச்சரிக்கையாகவும் இந்நோய் தொடர்பாக விழிப்புணர்வாக இருந்தால் இது போன்ற நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்றும் திருமணத்திற்கு முன் இளம் வயது பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என மருத்துவர் ஷஃபாலிகா.எஸ்.பி தெரிவித்தார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *