State

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் உயிரிழப்பு

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் உயிரிழப்பு
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் உயிரிழப்பு


புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். புதுச்சேரியில் தற்போது அதிகளவு காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலுவிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி தருமபுரியை சேர்ந்த மீனரோஷனி (வயது 28) என்ற பெண்மணி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாக இயக்குனரகத்து தகவல் கிடைத்தவுடன் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி அந்த பெண்மணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 04.09.2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேல் சிகிச்சைக்காக 08.09.2023 அன்று கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அன்றே ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனின்றி 12.09.2023 மரணமடைந்தார்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *