
புதுச்சேரி: புதுச்சேரியின் புல்வார்டு பகுதியில் விரை வில் இ-ரிக் ஷாக்களை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி) அல்லது புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (பிடிடிசி) மூலம் இந்த இ-ரிக் ஷாக்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
பெரிய நகரங்களில் காற்று மாசடைய 70 சதவீதம் அளவுக்கு, வாகனங்கள் வெளியிடும் புகையே காரணம் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில், புதுச்சேரியும் விதிவிலக்கல்ல என்பது மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.