State

புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும் | New depression likely to form tn will receive widespread rain from November 14

புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும் | New depression likely to form tn will receive widespread rain from November 14
புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும் | New depression likely to form tn will receive widespread rain from November 14


சென்னை: வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகத்தில் வரும் 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 12, 13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நவ. 10-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 9 செ.மீ., திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, சென்னை அம்பத்தூரில் 8 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில்7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியல், புழல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *