![பாகிஸ்தானில் தேவாலயங்கள், வீடுகள் தாக்கப்பட்ட விவகாரம்: 129 பேர் கைது பாகிஸ்தானில் தேவாலயங்கள், வீடுகள் தாக்கப்பட்ட விவகாரம்: 129 பேர் கைது](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/17/xlarge/1097087.jpg)
![பாகிஸ்தானில் தேவாலயங்கள், வீடுகள் தாக்கப்பட்ட விவகாரம்: 129 பேர் கைது பாகிஸ்தானில் தேவாலயங்கள், வீடுகள் தாக்கப்பட்ட விவகாரம்: 129 பேர் கைது](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/17/xlarge/1097087.jpg)
ஜரன்வாலா(பாகிஸ்தான்): பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக 129 முஸ்லிம்களை அந்நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஃபைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் ராஜா அமிர் என்ற கிறிஸ்தவர், குரான் புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்தெறிந்ததாக பரவிய தகவலை அடுத்து, அந்த நகரில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது ஒரு கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு தேவாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், 4 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 12 வீடுகள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.