![படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்… கண்டுகொள்ளப்படுமா ’பாழாகும்’ பழவேற்காடு? படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்… கண்டுகொள்ளப்படுமா ’பாழாகும்’ பழவேற்காடு?](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/03/xlarge/1035548.jpg)
![படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்… கண்டுகொள்ளப்படுமா ’பாழாகும்’ பழவேற்காடு? படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்… கண்டுகொள்ளப்படுமா ’பாழாகும்’ பழவேற்காடு?](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/03/xlarge/1035548.jpg)
சென்னை: தமிழகத்தின் வடகோடியில் உள்ள பழவேற்காடு மிக முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி, சமயேஸ்வரர், ஆதிநாராயணப் பெருமாள் கோயில், கலங்கரை விளக்கம், மகிமை மாதா ஆலயம், சின்ன மசூதி, டச்சுக்காரர்களின் கல்லறை, பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றிப் பார்ப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பழவேற்காட்டுக்கு வருகின்றனர்.
ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, உணவகம், தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இங்கே சரிவர இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய குறைகள் பல இருப்பினும், வார விடுமுறை நாட்களில் பழவேற்காட்டை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.