![நூற்றாண்டை நெருங்கும் கல்லாறு தூரிப்பாலம் – பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு நூற்றாண்டை நெருங்கும் கல்லாறு தூரிப்பாலம் – பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/xlarge/1026394.jpg)
![நூற்றாண்டை நெருங்கும் கல்லாறு தூரிப்பாலம் – பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு நூற்றாண்டை நெருங்கும் கல்லாறு தூரிப்பாலம் – பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/xlarge/1026394.jpg)
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத் தில் உள்ள கல்லாறு என்ற இடத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் பாலமாக கடந்த 1925-ம் ஆண்டு தூரிப்பாலம் கட்டப்பட்டது.
மலையடிவாரப் பகுதியில் கல்லாறு என்ற காட்டாற்றை வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம் 65 மீட்டர் நீளமும் 5.5 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 30 டன்னுக்கு மேல் எடையை தாங்கும் வகையில் இப்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் அடியில் எவ்வித தூண்களையும் அமைக்காமல் ஒட்டுமொத்த பாலமும் தொங்கும் வகையில் கட்டப்பட்டதாகும்.