![நீலகிரியில் தொடரும் மழையால் உதகையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள் நீலகிரியில் தொடரும் மழையால் உதகையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/09/xlarge/1042844.jpg)
![நீலகிரியில் தொடரும் மழையால் உதகையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள் நீலகிரியில் தொடரும் மழையால் உதகையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/09/xlarge/1042844.jpg)
உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், சுற்றுலா பயணிகள் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடப்பதாலும் உதகையில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பர் பவானி, அவலாஞ்சி உட்பட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.