![தொடர் மழையால் கொடைக்கானலில் தண்ணீர் கொட்டும் அருவிகள் தொடர் மழையால் கொடைக்கானலில் தண்ணீர் கொட்டும் அருவிகள்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/21/xlarge/1022753.jpg)
![தொடர் மழையால் கொடைக்கானலில் தண்ணீர் கொட்டும் அருவிகள் தொடர் மழையால் கொடைக்கானலில் தண்ணீர் கொட்டும் அருவிகள்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/21/xlarge/1022753.jpg)
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (ஜூன் 21) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 11 மணிக்கு மேல் 30 நிமிடத்திற்கும் மேலாக மழை கொட்டியது. மழை நின்றதும் சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது.