![திருப்பதி விஐபி தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய முறை.. தேவஸ்தானம் அறிமுகம் திருப்பதி விஐபி தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய முறை.. தேவஸ்தானம் அறிமுகம்](https://images.news18.com/tamil/uploads/2023/10/Tirupati-2023-10-1b4fbce7cc25c92384fdf69b14771c09-3x2.jpg?im=FitAndFill=(1200,675))
![திருப்பதி விஐபி தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய முறை.. தேவஸ்தானம் அறிமுகம் திருப்பதி விஐபி தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய முறை.. தேவஸ்தானம் அறிமுகம்](https://images.news18.com/tamil/uploads/2023/10/Tirupati-2023-10-1b4fbce7cc25c92384fdf69b14771c09-3x2.jpg?im=FitAndFill=(1200,675))
Tirupati | விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
- 1-MIN READ
| News18 Tamil
Tirupati,Chittoor,Andhra Pradesh
Last Updated :
![](https://images.news18.com/tamil/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-22-at-3.51.49-PM-2024-01-6241c13afe05692b3671ae5fc50ad118.jpeg)
0108
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலின் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வாங்குவதற்கு எஸ்எம்எஸ் கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
0208
ஆஃப்லைன் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்களுக்கு இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதில் எஸ்எம்எஸ் மூலம் அவர்களின் மொபைல் போன்களுக்கு கட்டண இணைப்பு அனுப்பப்படும்.
0308
யூபிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம் மற்றும் எம்பிசி இல் உள்ள கவுண்டருக்குச் செல்லாமல், கவுண்டரில் நீண்ட நேரம் செலவழிக்காமல் தரிசன டிக்கெட்டை தாங்களாகவே பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.
0408
திருமலையில் லக்கி டிப் முறையின் கீழ் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஆஃப்லைன் ஒதுக்கீட்டில் இந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
0508
இந்த முறையில், மறுநாள் காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், முந்தைய நாள் இரவு எம்பிசி கட்டிடத்தின் அருகே நூற்றுக்கணக்கில் காத்திருப் பார்கள். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற வேண்டியிருக்கும். சில நேரங்களில் சிபாரிசு கடிதம் கூட ரத்தாகி, டிக்கெட்டுக்கான குறுஞ்செய்தி வராமல் போவதும் உண்டு. இதைக்கூட அறிந்து கொள்ள முடியாமல் பலர் திருமலையிலேயே காத்திருப்பது வழக்கம்.
0608
இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை தேவஸ்தானம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அமல்படுத்தி உள்ளது. அதாவது, திருமலையில் சிபாரிசு கடிதத்தை, ஆதாருடன் விண்ணப்பித்த பக்தர்கள் டிக்கெட்டுக்காக அன்று இரவு வரை காத்திருக்க தேவையில்லை. சிபாரிசு கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு பிறகு செல்போனில் குறுஞ்செய்தியும், டிக்கெட் தொகையை செலுத்துவதற்காக பே லிங்க்-ம் வரும்.
0708
இதன் மூலம் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தினால், உடனே தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும். இதை வைத்து மறுநாள் காலை விஐபி பிரேக்தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லலாம்.
0808
திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும், கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் ஏழுமலையான் என்ற நம்பிக்கையால் தான் இத்தனை மக்கள் அங்கு ந்குவிகின்றனர். இந்த கோவிலில் தரிசனம் செய்ய எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று இவ்வளவு கூட்டம் வருவதால் அதற்கு முன்பதிவு தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- First Published :