
ஆற்காடு: திமிரி அருகே கழிவுநீர் கால்வாயின் சிமென்ட் கலவை தொட்டாலே பெயர்ந்து வருவதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கீழ்ப்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ‘பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா’ திட்டத்தின் கீழ் 5 தெருக்களில் ரூ.20 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.