![“தமிழகத்தின் சொத்து… ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து அரசியல் செய்யக் கூடாது” – அண்ணாமலை “தமிழகத்தின் சொத்து… ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து அரசியல் செய்யக் கூடாது” – அண்ணாமலை](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/13/xlarge/1122764.jpg)
![“தமிழகத்தின் சொத்து… ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து அரசியல் செய்யக் கூடாது” – அண்ணாமலை “தமிழகத்தின் சொத்து… ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து அரசியல் செய்யக் கூடாது” – அண்ணாமலை](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/13/xlarge/1122764.jpg)
திண்டுக்கல்: “இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுகொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (செப்.13) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் 5 இடங்களில் நுழைவுக் கட்டணம் செலுத்துகின்றனர். அந்த பணம் நகராட்சி மற்றும் அரசுக்கு சென்றடையாமல் வனக்குழுவுக்கு செல்கிறது. அந்த பணத்தை சரியாக கையாளுகின்றனரா என தெரியவில்லை. இதில் தமிழக அரசு தலையீட்டு வனக்குழுவுக்கு செல்லும் பணம் குறித்து வனத்துறை மூலம் வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானலில் நகருக்குள் நுழையும் காட்டுமாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.