National

டெல்லி முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
டெல்லி முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டின. இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரும், முன்னாள் கலால்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமார் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *