ஆண்டிபட்டி : ராஜதானி அருகே கொழிஞ்சிபட்டியைச் சேர்ந்தவர் இளையராஜா மனைவி நந்தினி 25, இதே பகுதியில் வசித்து வருபவர் பாப்பா, இருவரும் வீட்டின் அருகே துணிகள் துவைத்துக் கொண்டிருந்த போது அழுக்கு நீரை கீழே கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் ஆதரவாக அவரவர் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து நந்தினி புகாரில் கொழிஞ்சி பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, பாப்பா, பொன்னுத்தாய் ஆகியோர் மீதும், அழகர்சாமி புகாரில் நந்தினி, பாண்டி, சஞ்சய் ஆகியோர் மீதும் ராஜாதாணி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்