![ஏலகிரியில் மீண்டும் பறக்குமா ‘பாரா கிளைடிங்’? ஏலகிரியில் மீண்டும் பறக்குமா ‘பாரா கிளைடிங்’?](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/13/xlarge/1092225.jpg)
![ஏலகிரியில் மீண்டும் பறக்குமா ‘பாரா கிளைடிங்’? ஏலகிரியில் மீண்டும் பறக்குமா ‘பாரா கிளைடிங்’?](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/13/xlarge/1092225.jpg)
திருப்பத்தூர்: எழில் கொஞ்சும் ஏலகிரி மலையின் அழகை ரசிக்க மீண்டும் 'பாரா கிளைடிங்' சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை சாகச சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
'பாரா கிளைடிங்' சேவை ஏலகிரி மலையின் சுற்றுலா வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது. ஜவ்வாது மலை தொடரின் ஒரு நீட்சியாக இருக்கும் ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று கூறும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,400 மீட்டர் உயரம் கொண்ட ஏலகிரி மலை 14 சிறிய மலை கிராமங்களை உள்ளடக்கியது.