Tour

இயற்கையும், ஆன்மிகமும் நிறைந்துள்ள ‘திருநல்காசி’

இயற்கையும், ஆன்மிகமும் நிறைந்துள்ள ‘திருநல்காசி’
இயற்கையும், ஆன்மிகமும் நிறைந்துள்ள ‘திருநல்காசி’


ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாட்சி என்று அழைக்கப்படும் விருப்பாட்சப் பட்டணத்தை 13-ம் நூற்றாண்டில் மன்னர் திருமலை ஆண்டு வந்தார். அவருக்கு அசரிரீயாக வந்த உத்தரவின்படி தலையூத்து அருவிக்கு அருகில் அவரது இஷ்ட தெய்வமான சிவனுக்கு ‘விருப்பாட்ச ஈஸ்வரர்’ கோயிலையும், குல தெய்வமான பெருமாளுக்கு ‘நீலமலை அழகர்’ கோயிலையும் அமைத்தார். இக்கோயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மூலிகை வாசம் நிரம்பிய வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

கோயில் இருக்கும் பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்குச் செல்ல எந்தவித தடையும் இல்லை. மலையடிவாரத்தில் சில கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் நடந்து கோயிலை அடையலாம். சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியில் நீலமலை அழகர் கோயில், சப்த கன்னிகள், ஆஞ்சநேயர், விநாயகரை தரிசிக்கலாம்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *