Cinema

“அருவருக்கத்தக்கப் பேச்சு” – மன்சூர் அலி கானுக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் | Chiranjeevi condemn mansoor ali khan for hatefull speech against trisha

“அருவருக்கத்தக்கப் பேச்சு” – மன்சூர் அலி கானுக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் | Chiranjeevi condemn mansoor ali khan for hatefull speech against trisha
“அருவருக்கத்தக்கப் பேச்சு” – மன்சூர் அலி கானுக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் | Chiranjeevi condemn mansoor ali khan for hatefull speech against trisha


சென்னை: “அருவருக்கத்தக்கப் பேச்சு” என நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் கருத்துகளுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “த்ரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசிய கண்டனத்துக்குரிய கருத்துகள் என் கவனத்துக்கு வந்தன. அவரின் இந்த அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது. இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். த்ரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக அவர்கள் உடன் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பின்னணி: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம். இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று பதிவிட்டிருந்தது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *