![''அண்ணா மற்றும் கருணாநிதியின் ஆட்சியைப் போல எனது ஆட்சியும் தந்தை பெரியாருக்கே காணிக்கை'': முதல்வர் ஸ்டாலின் ''அண்ணா மற்றும் கருணாநிதியின் ஆட்சியைப் போல எனது ஆட்சியும் தந்தை பெரியாருக்கே காணிக்கை'': முதல்வர் ஸ்டாலின்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/17/xlarge/1124726.jpg)
![''அண்ணா மற்றும் கருணாநிதியின் ஆட்சியைப் போல எனது ஆட்சியும் தந்தை பெரியாருக்கே காணிக்கை'': முதல்வர் ஸ்டாலின் ''அண்ணா மற்றும் கருணாநிதியின் ஆட்சியைப் போல எனது ஆட்சியும் தந்தை பெரியாருக்கே காணிக்கை'': முதல்வர் ஸ்டாலின்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/17/xlarge/1124726.jpg)
சென்னை: "அண்ணா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம். மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து, மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.