ஆண்டுதோறும் கோயிலில் ஜூன் 15ம் தேதி கண்காட்சி நடைபெறும். அப்போது வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
- 1-MIN READ
| News18 Tamil
Tamil Nadu
Last Updated :
ஃபேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸும் இந்தியாவில் உள்ள ஒரு கோயிலுடன் சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளனர். வெகு சிலருக்கே இது பற்றி தெரியும். அது குறித்து பார்ப்போம்.
2015ஆம் ஆண்டு வெளியான செய்தியின்படி, பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது சந்தித்த மார்க் ஜூக்கர்பெர்க், இந்தியாவில் உள்ள ஒரு கோயில் குறித்து மோடியிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில், ஃபேஸ்புக் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தான் இந்தியாவில் ஒரு கோயிலுக்குச் சென்றதாக மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் மோடியிடம் கூறினாராம்.
ஜுக்கர்பெர்க் குறிப்பிட்ட அந்த கோயில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள கைஞ்சி தாம் ஆசிரமத்திற்கு மார்க் ஜுக்கர்பெர்க் சென்றுள்ளார். 1970களில் ஸ்டீவ் ஜாப்ஸ் கூட இந்தக் கோயிலுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. கைஞ்சி தாம் ஆசிரமத்திற்குச் சென்ற பிறகுதான் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்க ஸ்டீவ் ஜாப்ஸ் தனது செயலை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
கைஞ்சி தாம் என்பது நைனிடாலில் உள்ள பாபா நீம் கரௌலி ஆசிரமம். இது ஒரு அனுமன் கோயில் மற்றும் ஆசிரமம் ஆகும். இது 1960களில் நீம் கரோலி பாபாவால் கட்டப்பட்டது. இந்த ஆசிரமம் மலைகள், மரங்கள் மற்றும் ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. நீம் கரோலி பாபா 1973-ல் இறந்தார். ஆனால், இன்றும் பல உயர்மட்ட அமெரிக்கர்கள் அவரை நம்புவதாக கூறப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஜூன் 15ம் தேதி கண்காட்சி நடைபெறும். அப்போது வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஃபேஸ்புக் தொடங்குவதற்கு முன்பு ஸ்டீவ் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில் இந்தியா வந்து இந்தக் கோயிலுக்குச் சென்றதாக மார்க் ஜூக்கர்பெர்க் மோடியிடம் கூறினார்.
அப்போது, ‘நான் அந்த நேரத்தில் ஒரு மாதம் இந்தியாவிற்கு பயணம் செய்தேன். நான் இந்தியர்களைக் கூர்ந்து கவனித்தேன். அந்த பயணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’ என மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் மோடியிடம் கூறியதாக தெரிகிறது.
- First Published :