கடந்த 6 மாதங்களில் HDFC வங்கியின் பங்குகள் 17.80 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. இருப்பினும், ஆண்டுக்கு ஆண்டு (YTD) அடிப்படையில் அதன் செயல்திறன் ஒப்பீட்டளவில் பலவீனமாகவே உள்ளது. 2024ஆம் ஆண்டில் இதுவரை HDFC வங்கியின் பங்குகள் 0.30 சதவீதம் குறைந்துள்ளன. அதே நேரத்தில் BSE சென்செக்ஸ் குறியீடு இந்த காலகட்டத்தில் 14.80 சதவீதம் உயர்ந்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) ஆகியவற்றைக் காட்டிலும் ஹெச்டிஎஃப்சி வங்கி தலால் ஸ்ட்ரீட்டில் மூன்றாவது மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.
நடுத்தர மற்றும் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டாளர்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி வலுவான முதலீட்டுத் தேர்வாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் அதை நீண்ட காலக் கண்ணோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். HDFC வங்கி மற்றும் HDFC ஆகியவற்றின் இணைப்பின் பலன்கள் இன்னும் முழுமையாகக் காணப்படவில்லை. எனவே முதலீட்டாளர்கள் தங்கள் நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் எச்டிஎஃப்சி வங்கியுடன் எச்டிஎஃப்சி இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் தொழில்நுட்ப அடிப்படையில் ‘புல்லிஷ்’ போல் தெரிகிறது. ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஓஷோ கிருஷ்ணன் கூறுகையில், ”HDFC பங்குகள் ரூ. 1680 – ரூ. 1620 வரம்பில் ஆதரவைப் பெறலாம். 1700 க்கு மேல் முடிவடைந்தால் அது மேலும் வேகத்தைப் பெறலாம். இதனுடன், மற்ற ஆய்வாளர்களும் 1700க்கு மேல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக அது 1730 வரை செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.