பாரதி எண்டர்பிரைசஸின் கல்விச் சேவை பிரிவான பார்தி ஏர்டெல் அறக்கட்டளை, ஐ.ஐ.டி.,கள் உட்பட 50 தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எஃப்) பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை பொறியியல் மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்களை (ஐந்து ஆண்டுகள் வரை) படிக்கும் பல்வேறு சமூக-பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் தகுதி மற்றும் பொருள் அடிப்படையிலான உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்க:
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
‘பாரதி ஏர்டெல் ஸ்காலர்ஷிப் திட்டம்’ முக்கியமாக பெண் மாணவர்களை மையமாகக் கொண்டது. இந்த ஆண்டு 250 மாணவர்களுடன் தொடங்கும் உதவித்தொகை, ஆகஸ்ட் 2024 இல் சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்களுக்குப் பொருந்தும்.
“திட்டம் அதன் உச்சத்தை எட்டும்போது ஆண்டுக்கு ₹100+ கோடி செலவில் 4,000 மாணவர்களுக்குச் சென்றடைவதே லட்சியம்” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
முழு நிதியுதவியுடன் கூடிய கல்வி உதவித்தொகையானது, திறமையான மாணவர்களுக்கு, குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் இருந்து, தரமான கல்வியைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் நிதித் தடைகளைக் களைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் ஸ்காலர்ஷிப்கள் என்.ஐ.ஆர்.எஃப் (பொறியியல்) தரவரிசையில் முதல் 50 இடங்களில் உள்ள கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (AI, IoT, AR/VR, Machine Learning, Robotics) ஆகிய துறைகளில் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் கவனம் செலுத்தும்.
இந்த உதவித்தொகையைப் பெறுபவர்கள் ‘பாரதி அறிஞர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் படிப்புக் காலம் முழுவதும் கல்லூரிக் கட்டணத்தில் 100 சதவீதத்தைப் பெறுவதோடு மடிக்கணினியும் வழங்கப்படும். கூடுதலாக, அதற்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடுதி மற்றும் மெஸ் கட்டணம் வழங்கப்படும்.
‘பாரதி அறிஞர்கள்’ ஒரு மாணவரையாவது தொடர்ந்து, தானாக முன்வந்து, அவர்கள் பட்டம் பெற்று, பின்னர் வேலைவாய்ப்பைப் பெற்றவுடன், தொடர்ந்து ஆதரவளிக்க ஊக்குவிக்கப்படுவார்கள், இந்த மாற்றத்தக்க, நீடித்த முயற்சி வாழ்க்கையை வடிவமைக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்குபெற உதவும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் bhartifoundation.org/ bharti-airtel-scholership என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பார்தி எண்டர்பிரைசஸின் துணைத் தலைவரும், பார்தி ஏர்டெல் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான ராகேஷ் பார்தி மிட்டல் கூறும்போது, “தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல்வேறு அடுக்குகளில் உள்ள மாணவர்களுக்கு முன்மாதிரியான கற்றல் மற்றும் அணுகக்கூடிய கல்வியின் சங்கமத்தை எப்போதும் வெளிப்படுத்தி வருகின்றன. நாளைய தொழில்நுட்ப நிலப்பரப்பின் மாறும் பரிணாமத்தை கையாளும் திறன் கொண்ட நிபுணர்களை வளர்ப்பதற்கு, இந்திய கல்வித்துறையில் இந்த கோட்பாடுகளை வலுப்படுத்துவதே எங்கள் முயற்சி,” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“