பங்கு சந்தை செய்திகள் இன்று | சென்செக்ஸ் | நிஃப்டி | பங்கு விலைகள் சிறப்பம்சங்கள் | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 201.05 புள்ளிகள் அல்லது 0.89% அதிகரித்து 22,821.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 692.27 புள்ளிகள் அல்லது 0.93% உயர்ந்து 75,074.51 ஆகவும் இருந்தது.
லார்ஜ்-கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 237.30 புள்ளிகள் அல்லது 0.48% உயர்ந்து 49,291.90-ல் முடிந்தது.
மீடியா மற்றும் ரியாலிட்டி பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் பார்மா மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
பங்குகள் நிலவரம்
ஹெச்.சி.எல் (HCL) டெக்னாலஜிஸ், எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ், டெக் மஹிந்திரா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்கார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகியவை பின்தங்கின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“