கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 21 ஏப்ரல், 2024 05:28 AM
வெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2024 05:28 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 21 ஏப்ரல் 2024 05:28 AM
சென்னை: சென்னை நகரத்துக்குட்பட்ட யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் மே 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் 'பி' மைதானத்தில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையை இருப்பிடமாகக் கொண்டவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வீரர்கள் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும், 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு நேற்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி மாலை 6 மணி வரை வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். விவரங்களை சரிபார்த்த பின்னர் அவர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கான தகவல் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
எங்களை பின்தொடரவும்
தவறவிடாதீர்!