Special buse to Rameswaram Tai Amavasai 2024 | தை அமாவாசையொட்டி போக்குவரத்து துறையின் சார்பில் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
- 1-MIN READ
| News18 Tamil
Ramanathapuram,Tamil Nadu
Last Updated :
ராமேஸ்வரத்திற்கு தை அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரக்கூடும் என்பதால் போக்குவரத்து துறையின் சார்பில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு.
உலக பிரசித்தி பெற்ற காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக விளங்கிவரும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் மற்றும் அக்னி தீர்த்தம் கடலில் அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுடைய திதி, தர்ப்பணம் கொடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், ஆண்டுதோறும் வரக்கூடிய முதல் மூன்று அமாவாசையில் ஒன்றான தை அமாவாசை பிப் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.
அன்று பேருந்துகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து தங்களுடைய முன்னோர்களுக்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் எள்ளு பிண்டம் வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு பின்பு ராமநாதசுவாமி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடிவிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்வார்கள்
இதனால் போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் படி 8-ம்தேதி இரவு கிளாம்பாக்கத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், 9-ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்யலாம்.
- First Published :