மதுரை: பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுந்தது அருவருக்கத்தக்க அநாகரிக செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்ல நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாதிய எண்ணம் கொண்டவர் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும். பதவி ஆசை அற்ற ஒரு சித்தர் எனக் கூறப்படும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவை போற்றப்படும் நாள்தான் அவரது ஜெயந்தி, குருபூஜை விழா. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் கூறுவதில் அரசியல் உள்ளது. அவரவரின் நீர்வளம் அவரவர்களுக்கு என கேரளா, கர்நாடக நினைத்துக் கொண்டால் நமது வளம் நமக்கென்று நாம் எண்ண வேண்டியுள்ளது. பகை நாடுகளாக இருக்கக் கூடிய பாகிஸ்தானுக்கு கூட, சிந்து நதியிலிருந்து 80 சதவீத நீரை கொடுக்கிறோம்.