National

நெல்லை: ரயிலில் திருடு போன செல்போன், கூகுள் மேப் உதவியால் மூன்றே மணி நேரத்தில் மீட்பு – எப்படி தெரியுமா?

நெல்லை: ரயிலில் திருடு போன செல்போன், கூகுள் மேப் உதவியால் மூன்றே மணி நேரத்தில் மீட்பு – எப்படி தெரியுமா?


பட மூலாதாரம், Getty Images

நெல்லை அருகே ரயில் பயணத்தில் தனது தந்தையிடம் திருடப்பட்ட செல்போனை 3 மணி நேரத்தில் கூகுள் மேப் உதவியுடன் அவரது மகன் மீட்டுள்ளார். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் திருடனை பிடித்து செல்போனை அவர்கள் மீட்டுள்ளனர்.

இது எப்படி சாத்தியமானது? செல்போன் தொலைந்தால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதில் மீட்டுவிட முடியுமா?

என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் பழனிசாமி இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 4) நாகர்கோவிலில் இருந்து அதிகாலை திருச்சி செல்வதற்காக காஞ்சிபுரம் ரயிலில் ஏறியிருக்கிறார். ரயில் நெல்லை ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற போது தூக்கத்தில் இருந்து எழுந்த தனது கைப்பையும், மொபைல் போனும் திருடு போயிருப்பது அவருக்கு தெரியவந்தது. இதை தனது மகன் ராஜ் பகத்திடம் கூறியிருக்கிறார்.

அவரது மகன் கூகுள் மேப் டிராக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடனை பிடித்து அவர் திருடிய செல்போன் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளார்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *