National

நாளை சென்னை வரும் ஜெ.பி.நட்டா.. ஓபிஎஎஸ்ஸை சந்திக்க திட்டம்.. இறுதி கூட்டணியில் யார் யார்?

நாளை சென்னை வரும் ஜெ.பி.நட்டா.. ஓபிஎஎஸ்ஸை சந்திக்க திட்டம்.. இறுதி கூட்டணியில் யார் யார்?


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் 200-வது தொகுதியாக மத்திய சென்னை மாவட்டத்தில் நாளை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. சென்னையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிக்க : “2014-ல் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் நாடு நம்பிக்கை இழந்திருக்கும்” – பிரதமர் நரேந்திர மோடி உரை!

முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாளை சென்னையில் அண்ணாமலையுடன் பாத யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் பாஜக பாத யாத்திரை நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கவில்லை. சென்னையில் மாலையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதாவின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நாளை காலை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. அதன் பின்னர் மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக பயண நிகழ்ச்சி வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென பயண திட்டத்தை மாறியுள்ளது. காலை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மட்டும் கலந்து கொள்கிறார். இதற்காக நாளை மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் நட்டா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இரண்டு மாதம் திருச்சியில் நடைபெறும் புத்தக கண்காட்சி… எங்கு தெரியுமா.?


இரண்டு மாதம் திருச்சியில் நடைபெறும் புத்தக கண்காட்சி… எங்கு தெரியுமா.?

ஜெ.பி.நட்டா வருகையின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை  நட்டா சந்தித்து பேசுகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிடோர் சந்திக்க வாய்ப்புள்ளது. பாமக மற்றும் தேமுதிக உடனான பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவு எட்டாததால் அக்கட்சி சார்பில் யாரும் சந்திக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

விளம்பரம்

முன்னதாக, பாஜக கூட்டணியில் இருந்து வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்த ஏ.சி.சண்முகம், தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *