Sports

டெஸ்ட் தொடர் முழுவதும் விராட் கோலி விளையாட மாட்டாரா? என்ன சொல்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

டெஸ்ட் தொடர் முழுவதும் விராட் கோலி விளையாட மாட்டாரா?  என்ன சொல்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!


இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளிலும் விராட் கோலி விளையாடப் போவதில்லை என்ற தகவல் வலம் வருகிறது. அந்தத் தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டவுடன் தெரிய வரும்.

இதையும் படிக்க: யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டாரா என்பது இந்த தருணம் வரை உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது. ஆனால், அவர் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று பேசப்படுகிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடப் போவதில்லையா அல்லது மூன்று போட்டிகளிலும் விளையாடப் போவதில்லையா போன்ற தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை.

இதையும் படிக்க: இந்திய சுழற்பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்த இங்கிலாந்து வீரர்!

அடுத்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்த போட்டிக்கான அணியை இந்தியா அறிவிக்க உள்ளது. விராட் கோலி அணியில் இடம்பெறவில்லை என்றால், அது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடருக்கும் மிகப் பெரிய இழப்பாக இருக்கும். அவர் அணியில் இல்லை என்றால் உலக கிரிக்கெட்டுக்கு அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் சிறப்பாக இருக்கப் போகிறது. முதல் இரண்டு போட்டிகள் சிறப்பானதாக அமைந்தது என்றார்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *