Sports

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா | தினமணி

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா |  தினமணி


கும்மிடிப்பூண்டி: இதய நோயிலிருந்து இளைஞரை பாதுகாப்பதை வலியுறுத்தி தொழிற்சாலைகளுக்கு இடையே பிரசாந்த்-ரைசா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை வளாக உற்பத்தியாளர் சங்கம், சிப்காட் ரோட்டரி சங்கம், சோழவரம் முதல் ஸ்ரீ சிட்டி மனிதவள மன்றம், அலமேலு புற்றுநோய் விழிப்புணர்வு அறக்கட்டளை, சென்னை பிரசாந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இப்போட்டியில் 36 நிறுவனங்கள் பங்கேற்றன.

நிகழ்வில் பிரசாந்த் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டா பிரசாந்த் கிருஷ்ணா, தலைமை நிருவாக அதிகாரி டாக்டா பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி தொழில் நகர ரோட்டரி சங்க தலைவர் கே.ராஜகோபாலன், எஸ் டூ எஸ் மன்றத்தின் தலைவர் ஜெ.ராஜரத்தினம், எஸ் டூ எஸ் மன்றத்தின் தலைவர் பி.ரவிக்குமாா், சிப்காட் உற்பத்தியாளர் ஜி. எம்.கிருஷ்ணமூா்த்தி, எஸ் டூ எஸ் மன்ற பொருளாளா் கே.வெங்கடேஷ் குமார், டி.ஜே.எஸ் கல்விக் குழும இயக்குனா் டி.ஜெ.தமிழரசன் முன்னிலை வகித்தாா். இதில் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ஜேசுபாபு ஹனிமன் வாழ்த்துரை வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வழங்கினார்.

இதில் முதலிடம் பிடித்த எஸ்.ஏ.சி இஞ்சின் காம்பொனன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் அணிக்கு ரூ.50,000, இரண்டாவது இடம் பிடித்த காமாட்சி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அணிக்கு ரூ.25,000, மூன்றாவது இடம் பெற்ற மிட்சுபா தொழிற்சாலை, நான்காவது இடம் பெற்ற பிரசாந்த் மருத்துவமனை அணிக்கு பரிசளிக்கப்பட்டது.

36அணிகளிடம் இருந்து பெறப்பட்ட நுழைவு கட்டணம் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரோட்டரி சங்கத்தின் இதய நோய் விழிப்புணாவு பரிசோதனை முகாமுக்காக நன்கொடையாக வழங்கப்பட்டது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *