புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி திரிசூலம் பிடாரி அம்மன் கோவிலில் 23 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தமிழ் மாதங்களில் தை மாதம் என்றாலே சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை ஆகிய அனைத்தும் நாட்களும் ஆன்மீகத்தில் சிறப்பு இடம் பிடித்து விடுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள திரிசூலம் பிடாரி அம்மன் கோவிலில் வருடம் தோறும் தை மாத நிறைவு செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் இந்த ஆண்டும் இருபத்து மூன்றாம் ஆண்டு திருவிளக்கு பூஜை சுமங்கலி பெண்கள் நிறைந்து திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜை முடிந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த திருவிளக்கு பூஜை செய்வதனால் குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி எல்லாவிதமான ஐஸ்வர்யங்களும் பெற்று செல்வமும், வளமும், நலமும் பெற முடியும் என்றும் சுமங்கலி பெண்கள் இந்த பூஜை செய்வதனால் தங்களுடைய கணவர்கள் ஆயுள் நீண்டு நலமுடன் இருப்பர் என்பது ஐதீகம் என்றும் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிறந்த வீடியோக்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :