சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், அகில இந்திய தொழிற்சங்கத்தேர்வு, மார்ச் மாதம் நடக்கிறது.இந்நிலையில், 2017ல் இரண்டு ஆண்டுகள் தொழிற்பிரிவுத் தேர்வில் பங்கேற்காதோர் மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு மட்டும், துணை தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான தேர்வு கட்டணம், இம்மாதம் 15ம் தேதிக்குள் செலுத்தலாம். தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம்.