
கொழும்பு: இலங்கையில் வன்முறை பரவாமல் தடுக்க 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அதன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு மட்டுமின்றி, தினமும் 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழக்கம்
இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டு பெரும் எண்ணிக்கையான மக்கள் அவரை பதவி விலகுமாறு கோரி முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் கலைக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. போலீஸ் பஸ், ஜீப், 2 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மோதலில் ஐந்து போலீசார் காயம்; ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வன்முறை தொடர்பாக, 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலைமை மோசமடைந்து வருவதை உணர்ந்த இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச, மேலும் வன்முறையைத் தடுக்க நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஏற்கனவே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணி வரை நீடிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தலைநகர் கொழும்பில் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரகசிய இடம்
இதேவேளை, சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். அனுருத்த பண்டார அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று சமூக வலைத்தளத்தின் ஊடாக ஆர்ப்பாட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுமக்களின் கடும் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ள இலங்கை அரசாங்கம், நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதுதான் உள்ளூர் ஊடகங்களில் பிரதான விவாதப் பொருளாக உள்ளது.
இலங்கைக்கு 4 கோடி லிட்டர் டீசல் உதவியை இந்தியா வழங்குகிறது
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பக்லி கூறியதாவது: இலங்கைக்கு ஏற்கனவே, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோல், டீசல், விமான எரிபொருளை இந்தியா வழங்கி வருகிறது. இதுவரை, மூன்று சரக்கு கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது நான்காவது கப்பல் வந்து சேர்ந்துள்ளது. .இதில், 4 கோடி லிட்டர், டீசலில் இருந்து வந்தது.மேலும், உணவு பொருட்களுக்கான, 3,500 கோடி ரூபாய் கடனில், அரிசி கொள்முதல் செய்ய, ‘ஆர்டர்’ போடப்பட்டுள்ளது.இந்திய ஏற்றுமதியாளர்கள், 40,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ரூ.750 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும். அவசர உதவிக்கு இலங்கை அழைப்பு விடுத்தால் அத்தியாவசியப் பொருட்களை விமானம் மூலம் அனுப்ப இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.