
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றாலத்துக்கு ஆண்டுதோறும் சாரல் சீஸன் காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் குற்றாலம் வழியாக சென்று வருகின்றனர்.
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கூடுதல் வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், கூடுதலாக நவீன பார்க்கிங் வசதி போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதிதாக எந்த ஒரு வசதியும் செய்துதரப்படாத நிலையில், ஏற்கெனவே இருக்கும் வசதிகளைக் கூட பராமரிக்காமல் வைத்திருக்கின்றனர்.