
விடுமுறை நாட்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வுகாண நகராட்சி, சுற்றுலாத் துறை இணைந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
காலாண்டு விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். தினமும் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா வந்தோர் இயற்கை எழிலை ரசிக்க முடியாத நிலை நிலவுகிறது.