
புதுடெல்லி: பாஜக.வின் ஓபிசி வாக்கு வங்கியை வலுப்படுத்துவதில் பிஎம் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையிலான பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை, அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து விஸ்வகர்மா தினம் மற்றும் தனது 73வது பிறந்தநாளில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் முன் பகவான் விஸ்வகர்மாவை பிரதமர் மோடி வழிபட்டார்.