Sports

நியூஸி. மீதான ஷமியின் ‘தாக்குதல்’ – டெல்லி, மும்பை காவல் துறையின் ஜாலி பதிவுகள்

நியூஸி. மீதான ஷமியின் ‘தாக்குதல்’ – டெல்லி, மும்பை காவல் துறையின் ஜாலி பதிவுகள்


மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி. அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பல சாதனைகளையும் படைத்தார் ஷமி. நியூஸிலாந்து உடனான வெற்றிக்குப் பிறகு இது செமி பைனல் இல்லை ஷமி பைனல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்தின் இன்னொரு வடிவமாக டெல்லி மற்றும் மும்பை காவல் துறையின் எக்ஸ் தள பதிவுகள் கவனம் ஈர்த்து வருகின்றன. முதலில் டெல்லி காவல் துறை தனது எக்ஸ் பக்கத்தில், "இன்றிரவு நடந்த தாக்குதலுக்கு ஷமி மீது நீங்கள் வழக்குப் பதிவு செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம்" என மும்பை காவல் துறை டேக் செய்து பதிவிட்டது.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *