
உதகை: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை குளுகுளு காலநிலை நிலவும் உதகையில் கழிக்கவும், 2-வது சீசனை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால், நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக, தொடர் விடுமுறையிலும் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.