
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கடை அருகே பொட்டல்குளம் உடைந்து ஊற்றுக்குழி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது.
நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. நாகர்கோவிலில் நேற்று காலையிலும் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.