
புதுடெல்லி: ஓபராய் குழுமத்துக்கு சொந்தமாக இஐஎச் மற்றும் இஐஎச் அசோசியேட்டட் ஹோட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த குழுமத்தின் தலைவரான பிருத்வி ராஜ் சிங் (பிஆர்எஸ்) ஓபராய் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.
இதுகுறித்து அவரது மகன் விக்ரம் ஓபராய் கூறுகையில், “இந்திய விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் பிஆர்எஸ் ஓபராய்’’ என்றார்.
பிஆர்எஸ் ஓபராய்க்கு 2008-ல் இந்தியாவின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்துள்ளது.