
கொழும்பு-இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு நேரம் 10 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தினமும் ஏழு மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. இதனிடையே, மின்வெட்டை 10 மணி நேரமாக இலங்கை அரசு நேற்று நீட்டித்தது.
![]() |
இதுகுறித்து, இலங்கை அரசின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க நேற்று கூறியதாவது: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நீர் மின் நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் 750 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
விளம்பரம்